இலங்கையில் போர்முனைகளில் சிங்கள ஆர்மியின்தாக்குதலில் சிக்கி அப்பாவித் தமிழர்கள் உயிரையும்அவயங்களையும் இழந்து வருகிறார்கள். போதிய மருத்துவ வசதிஇன்றி படுகாயம் அடைந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகஉயிரை விடும் கொடூரம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இதற்காக இருபது டன் மருத்துவப் பொருட்கள்விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறதுஎன்று இந்திய மைய அரசும், அறிவித்தது. அதை சொல்லி,சொல்லியே டாக்டர் கலைஞர் சந்தோஷத்தில் திளைத்தார்.மருத்துவப் பொருட்களுடன் இந்திய டாக்டர்கள் குழுவும் சென்றது ஆனால் இன்றைக்கு வந்திருக்கிற செய்தி என்னவென்று தெரிந்திருக்கும்உங்களுக்கு... கட்டுப்போடக் கூட துணியில்லாமலும், அறுவைச் சிகிச்சைக்குமயக்க மருந்தில்லாமலும் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள்திணறி வருகிறார்களாம். அப்படியென்றால் காயம் பட்டவர்களின்நிலையை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே...எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு குச்சிகளை வைத்துகட்டுப் போடுகிறார்களாம். காயங்களுக்கு பெட்சீட் துணியைவெட்டி கட்டுகிறார்களாம்.
தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கும்படிடாக்டர்கள் கோரியிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய அரசுஅனுப்பிய மருந்துப் பொருட்கள் எங்கே போயின? அவை சிங்களராணுவத்தினருக்கு போய் சேர்ந்திருக்கும் என்பதே பலருடையஅனுமானம். அப்பாவித் தமிழன் செத்தால் சாகட்டும் என்கிறமனநிலை தான் ப்ரணாப் முகர்ஜிக்கும் கலைஞருக்கும்...
இலங்கையில் இந்திய டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லைஇதுபற்றியெல்லாம் யாரும் கேட்க முடியாது. கேட்டால் தயாராக இருக்கிறதுதே.பா.சட்டம்.
Sunday, March 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment