Saturday, January 24, 2009
குண்டு வைக்காமல் இருப்பதே மிகப்பெரிய நாட்டுப் பற்று
ஜனவரி 26 இந்தியக் குடியரசு தினம். யானை வரும் பின்னேமணியோசை வரும் முன்னே. இந்தியத் தொ(ல்)லைக் காட்சி வரலாற்றில்குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுவிட்டன போக்குவரத்து சிக்னல்களில் பொம்மை விற்றுக்கொண்டிருந்த சின்னஞ்சிறு சிறுவர்களின் கைகளில் சிலநாட்களாகவாகனங்களில் படபடப் போகும் தேசியக் கொடிகள்.. நல்ல விற்பனைஎன்று நினைக்கிறேன். இந்த நாட்கள் இந்தக் குழந்தைகளுக்காவதுஉதவியாக இருக்கிறதே என்கிற மகிழ்ச்சி எனக்கு... அங்காடிகளில்பெரிய, பெரிய. தேசியக் கொடிகள் விற்பனைக்குப் பறக்கின்றன. நினைத்துப் பார்க்கிறேன். சுதந்திர தினம். குடியரசு தினங்களில்சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு சுற்றித் திரிந்த அந்த நாட்களை.தேசியக் கொடிகளை சட்டைப் பையில் குத்திக் கொள்ளும்பழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரையும் போல எனக்கும்இருந்து. இப்போதெல்லாம், சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டுபோக்குவரத்து சிக்னலில் ஒளிரும் சிவப்பு விளக்கை அலட்சியப்படுத்திக் கொண்டு செல்லும்வாகனஓட்டிகளை பார்க்கும்போது என் உதட்டோரம் ஒரு புன்முறுவல் பூக்கும். ‘தேசியக் கொடி கொடுத்தார்கள்... அதைக் குத்திக் கொள்ள மேலாடைதருவது யார்?’ என்ற கவிதையை எப்போதோ படித்த ஞாபகம்.இப்படியெல்லாம் பேசுவதால் இவனுக்கு நாட்டுப் பற்றே இல்லை என்று நீங்கள்நினைத்தாலும் நினைக்கலாம். நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு நாட்டுப் பற்று இருக்கிறதா? இல்லையா? என்று. நிச்சயம் இருக்கும்.காஸாவில் குண்டு போட்டால் கண்டனமும் இலங்கை என்றால் ‘போரில் அப்பாவிகள்சாகத்தான் செய்வார்கள்’ என்கிற மனித நேய அம்மாக்களை நினைத்தும், இந்தத் தேசத்தில் நடக்கும் இன்னபிற அக்கிரமங்களால் தூண்டப்பட்டும் ஆயுமேந்தாமல் உணர்ச்சியற்ற சடலமாக திரிவதேநாட்டுப் பற்று என்று ஒன்று எனக்கு இருப்பதால் தானே....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment