Thursday, March 12, 2009

ஈழம்: ஜெ.,வின் மனமாற்றத்ததை சந்தேகிக்கலாமா?

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். சொந்த ஊருக்குப் போய் வந்ததில் ஒரு வாரம் போய்விட்டது. அதுவும் ஒரு நகரம் தான் என்றாலும் பிரிய மனமில்லாமல்பெருநகருக்குத் திரும்பினேன். அண்ணா திமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்து அந்தப் போராட்டத்தை நடத்தியேமுடித்துவிட்டார்.
அப்பாவித் தமிழ் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு போரென்றால்அப்பாவிகள் சாவது சகஜம் என்று திருவாய் மலர்ந்தவர் அவர். அப்போது தமிழருக்குத் தனிநாடு தேவைதான். ஈழத்தமிழர்கள் மீதான போரைநிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என்கிறார்.நாடாளுமன்றத் தேர்தல் இப்படியொரு நிலைப்பாட்டை அவரை எடுக்க வைத்திருக்கிறதுஎன்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மாற்றங்கள் ஒன்று மட்டுமேநிரந்தரமானது என்று கொண்டால், அவரது இந்தமாற்றம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்பதேஎன்னைப் போன்ற பலரது எண்ணமும், விருப்பமும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனின்மாற்றம் தான் அக்டோபர் இரண்டாம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தத் தூண்டியது. அதுதானே இன்றையஇந்த எழுச்சிக்கெல்லாம் ஆரம்பம். ஆரம்பத்தில் ஈழப் பிரச்னையில்அவர் கொண்டிருந்த கருத்து ரொம்பவும் ஆரம்ப நிலையிலானது என்பதையாவரும் அறிவோம்...
ஆக, தா.பாண்டியனைப் போல் ஜெ.,வின் ஈழம் பற்றியகருத்து மாற்றம் ஆக்கப் பூர்வமானதாக இருக்க வேண்டும்என்பதே நமது விரும்பமும் கூட. தமிழகத்தின் நரேந்திர மோடி ஜெ., என்று சொல்லிக்கொண்டு திரிந்த, திரியும் பார்ப்பன எண்ணம் கொண்டோர்முகத்தில் எல்லாம் ஜெ.,வின் உண்ணாவிரதம் கரியைப்பூசிவிட்டது. குறிப்பாக சோவின் முகத்தில், சுப்பிரமணிசுவாமிமுகத்தில் கூட கரிதான்...
என்றும் ஈழத்தமிழர்களின் மறக்க முடியாத ஒரு மாபெரும்இந்தியத் தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை யாரும்மறுக்க முடியாது. மாவீரன் முத்துக்குமாரும் தனது மரண சாசனத்திலும்இதை சொல்லியிருப்பார். விடயத்துக்கு வருவோம். எம்.ஜி.ஆரின் வழியில்வந்த அண்ணா திமுகவினர் இப்போதுதான் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்...ஜெ.,வின் முந்தைய நிலைப்பாட்டால் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தஅதிமுக தொண்டர்கள், இனி நிம்மதியாக ஈழ உரிமைக்குக் குரல் கொடுப்பார்கள்..
ஈழத் தமிழர்களின் மீது போர்த் தொடுத்து வரும் காங்கிரஸ் கட்சிக்குஎதிராக இந்தத் தேர்தலில் விழும் வாக்குகளை தனக்கும் தனது கூட்டணிக்கும்திருப்பும் நோக்கில் இந்த முடிவை ஜெ., எடுத்திருந்தால் அதுபற்றிகாலம் தான் நமக்கு பதில் சொல்லும். தேர்தலில் யாருக்கும்அறுதிப் பெரும்பான்மைக் கிடைக்காமல் போய் காங்கிரஸை அதிமுகஆதரிக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்?மூன்றாவது அணி தொடக்க விழாவை நடத்தி விட்டார்கள். தேர்தல் முடிந்ததும்,இந்த அணிக்குள் நடக்கப் போகும் கும்முடிப்பிடி சண்டையை நினைத்துப்பாருங்கள்... தேவகவுடா கர்நாடகத்தில் நடத்திய நாடகத்தை யாரும்அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
இந்தத் தேர்தலில் வீட்டிற்கு வீடு பிரசார டிவிடிக்கள் கொடுக்கப்பட்டுஈழ மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் காண்பித்து காங்கிரஸின் பழிவாங்கும் கோரமுகத்தை கிழிக்கப் போகிறார்கள். அதில் பெரியார் திராவிடகழகம் தான்முன்னாடியாக இருந்து டிவிடி தயாரித்திருக்கிறது. இந்தப் புதிய முறையை அரசியல் கட்சிகளும்பின்பற்றத் தொடங்கும் என்று நினைக்கிறேன். (கலைஞர் தமிழினக் கொலைஞர் என்கிறசிடியைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் ) அரசியல்வாதிகளே!வாக்குகளை அள்ள ஈழ மக்கள் உங்களுக்கு உதவலாம்.ஆனால், நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்களா? குறைந்தபட்சம் அகதிகள்முகாம் என்கிற பேரில் சிறைச் சாலைகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏதாவதுசெய்ய வேண்டும். வாக்குகளை அள்ளிக் கட்டிக் கொண்டு ஈழத்தமிழனை ஜெ., மறந்துவிட்டால்அவரை காலம் மன்னிக்காது...
நன்றி...

2 comments:

கிருஷ்ணா said...

கலைஞர் கொடுத்த இலவச தொலைக்காட்சியில் மக்கள் பிரச்சார டிவிடி பார்க்கப்போகின்றார்கள். நல்லாத்தான் இருக்கு..

எம்.ஜி.ஆருக்கு ஈழத்தமிழர் மத்தியில் இருக்கும் அபிமானம் எல்லைகடந்தது. அதுசரி, ஜெயலலிதா (சரியோ தவறோ) தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பவர் என்று கூறுகிறார்கள். இது உண்மையா?

Anonymous said...

இதெல்லாம் அரசியல்ல சகயம்ப்பா!

Post a Comment