Friday, January 30, 2009
Thursday, January 29, 2009
முத்துக்குமாரின் மரண சாசனம்
Wednesday, January 28, 2009
அப்படியென்றால் தினமலருக்கு ஆபத்தில்லை
உண்மையை எழுதினால் உயிர் போகும்
இலங்கையில் அண்மையில் கொல்லப்பட்ட சிங்களமற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பட்டியல்
1.சிவராம் தாரக்கி _தமிழ்நெட் ஆசிரியர்2.சுப்பிரமணியம் சித்தரஞ்சன் _சுடரொளி நிருபர்3.நிமலராஜன் _தமிழ்நெட்4.சுரேஷ்குமார் _உதயன் இதழ் மார்க்கெட்டிங் மேனேஜர்5.ரஞ்சித்குமார் _உதயன் இதழ் சர்குலேஷன் மேனேஜர்6.சம்பா லக்மல் டி சில்வா _பத்திரிகையாளர்7.மரிதாஸ் மனோஜன் தாஸ் _யாழ்பாணம் பத்திரிகை ஏஜெண்ட்8.சதாசிவம் பாஸ்கரன் _உதயன் இதழ் விற்பனையாளர்9.ருசிகா பிரசாந்தி _பத்திரிகையாளர்10.சுபாஸ் சந்திரபோஸ் _நிலம் ஆசிரியர்11.செல்வராஜ் ராஜவர்மன் _உதயன் க்ரைம் நிருபர்12.நிலக்ஷன் சகாதேவன் _இதழியல் மாணவன்13.இசைவிழி செம்மியன் _விஓடி நிருபர்14.சுரேஷ் லிம்பியோ _விஓடி தொழில்நுட்பப் பணியாளர்15.தர்மலிங்கம் _விஓடி16.குணசிங்க _தினவனா சிங்களப் பத்திரிகை நிருபர்17.பரணி ருபசிங்கம்தேவகுமார் _எம்டிவி நிருபர்18.லசந்த விக்ரமதுங்க _சண்டே லீடர் ஆசிரியர்
Tuesday, January 27, 2009
ஈரோடு ரயில் நிலையம் வழியாகஇலங்கைக்கு இந்தியா அனுப்பும் டாங்கிகள்
பிப்ரவரி நான்காம் தேதி தமிழகத்தில் இலங்கை தேசியக் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபடுகிறது.தமிழர்கள் உண்மையில் எரிக்க வேண்டிய தேசியக் கொடிஅதுவல்ல... என்பது என் கருத்து...
Monday, January 26, 2009
Saturday, January 24, 2009
குண்டு வைக்காமல் இருப்பதே மிகப்பெரிய நாட்டுப் பற்று
ஜனவரி 26 இந்தியக் குடியரசு தினம். யானை வரும் பின்னேமணியோசை வரும் முன்னே. இந்தியத் தொ(ல்)லைக் காட்சி வரலாற்றில்குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுவிட்டன போக்குவரத்து சிக்னல்களில் பொம்மை விற்றுக்கொண்டிருந்த சின்னஞ்சிறு சிறுவர்களின் கைகளில் சிலநாட்களாகவாகனங்களில் படபடப் போகும் தேசியக் கொடிகள்.. நல்ல விற்பனைஎன்று நினைக்கிறேன். இந்த நாட்கள் இந்தக் குழந்தைகளுக்காவதுஉதவியாக இருக்கிறதே என்கிற மகிழ்ச்சி எனக்கு... அங்காடிகளில்பெரிய, பெரிய. தேசியக் கொடிகள் விற்பனைக்குப் பறக்கின்றன. நினைத்துப் பார்க்கிறேன். சுதந்திர தினம். குடியரசு தினங்களில்சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு சுற்றித் திரிந்த அந்த நாட்களை.தேசியக் கொடிகளை சட்டைப் பையில் குத்திக் கொள்ளும்பழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரையும் போல எனக்கும்இருந்து. இப்போதெல்லாம், சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டுபோக்குவரத்து சிக்னலில் ஒளிரும் சிவப்பு விளக்கை அலட்சியப்படுத்திக் கொண்டு செல்லும்வாகனஓட்டிகளை பார்க்கும்போது என் உதட்டோரம் ஒரு புன்முறுவல் பூக்கும். ‘தேசியக் கொடி கொடுத்தார்கள்... அதைக் குத்திக் கொள்ள மேலாடைதருவது யார்?’ என்ற கவிதையை எப்போதோ படித்த ஞாபகம்.இப்படியெல்லாம் பேசுவதால் இவனுக்கு நாட்டுப் பற்றே இல்லை என்று நீங்கள்நினைத்தாலும் நினைக்கலாம். நானும் நினைத்துப் பார்க்கிறேன்.எனக்கு நாட்டுப் பற்று இருக்கிறதா? இல்லையா? என்று. நிச்சயம் இருக்கும்.காஸாவில் குண்டு போட்டால் கண்டனமும் இலங்கை என்றால் ‘போரில் அப்பாவிகள்சாகத்தான் செய்வார்கள்’ என்கிற மனித நேய அம்மாக்களை நினைத்தும், இந்தத் தேசத்தில் நடக்கும் இன்னபிற அக்கிரமங்களால் தூண்டப்பட்டும் ஆயுமேந்தாமல் உணர்ச்சியற்ற சடலமாக திரிவதேநாட்டுப் பற்று என்று ஒன்று எனக்கு இருப்பதால் தானே....
என் முதல் பதிவை ஈழத்தமிழர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்....
ஓடியாடித் திரிந்த சின்னஞ்சிறுசுகள், கையின்றியும் காலின்றியும் சிங்களஇனவெறியின் அடையாள சாட்சியங்களால், எங்கள் மண்ணில், மலிந்துபோய்விட்டனர்.இந்தக் கொடுமையை யாரிடம் சொல்வோம்? இதனைக் தடுக்க முனைவோர் யாருமிலையா?
வெறிகொண்டு ஏகும் சிங்கள ராணுவ சிப்பாயின் கனத்த சப்பாத்து மிதிப்பில்சிக்கி எங்கள் குழந்தைகள் எழுப்பும் அவலக்குரல் கேட்கிறதா? இதயமுள்ளோருக்கு நிட்சயம்கேட்கும். உணவில்லை. மருந்தில்லை. குந்தியிருக்கக் கூடாரம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாய்அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை.இறுதிக் கணங்கள் எண்ணப்படுவதாக நம்பிக்கைப் பிடிதளர்ந்த ஈழத்தமிழ் மக்களுக்குஒரு நம்பிக்கை ஒளியைக் காட்ட வேண்டியது, கைபிடித்து அவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டியது,அணைத்து ஆசுவாசப்படுத்த வேண்டியது உலகத் தமிழினத்தின் குறிப்பாய் தாய் உறவெனநம்பிக்கை வைத்திருக்கும் தமிழகத்தின் வரலாற்றுக் கடமையாகும். அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால்தமிழினம் என்ற ஒரு உணர்வின் தளத்தில் இருந்து அவர்களுக்கு காப்பரணாய் நிமிரவேண்டியது தமிழகத்தின்இன்றைய தலையாய கடமையாகும். உலகெங்கும் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஆறரைக் கோடிதமிழர்கள். தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர், தமிழினத்தின் தலைமகன் தமிழர் தலைவர் கலைஞர்கருணாநிதி. இந்திய மத்திய அரசோ தமிழகத்தின் மடிப்பிச்சையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்மத்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்தில் அசையவில்லை அல்லது தமிழக அரசால் அசைக்க முடியவில்லை.தமிழகம் குறித்தும் தமிழக மக்களின் பேரெழுச்சி குறித்தும் அலட்சிய மனோபாவத்துடன் நாட்கள்கடத்தப்படுகின்றன. சிங்களத்தின் போர்வெறிக்கு தமிழின அழிப்பிற்கு மௌன சாட்சியாய் கலைஞர் இருக்கின்றார்என்பது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் எமக்கெல்லாம் கவலையளிக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில்பற்றி எரிந்த பேரெழுச்சி, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எழுந்த இன உணர்ச்சி அலை, ஈழத்தமிழர்கள் மத்தியில்ஒருவிதமான நம்பிக்கையை பெருமிதமான எண்ணங்களைத் தோற்றுவித்திருந்தது. மனித சங்கிலிப் போராட்டம்,வீதிமறியல் போராட்டம், உண்ணாவிரதப்போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்றத் தீர்மானங்கள், சர்வக்கட்சி மாநாடுகள், சந்திப்புகள், வாக்குறுதிகள், போராட்டங்கள்! இப்பெரும் மனித ஆற்றலுக்கும் உணர்விற்கும் எதுவிதமான பிரயோசனமும் இல்லாமல் போனதுவருத்தத்திற்குரியதே. ஏன் தாமதிக்கின்றார்கள். சிங்களத்தின் திட்டம் தடங்கல் இல்லாமல் முன்னேறி குறித்த இலக்கைஅடைவதற்கான கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? தமிழ் மக்களைத் தாக்க அவர்களின் விடுதலைப் போராட்டத்தைஅழிக்க சிங்கள அரசின் கோரிக்கைக்கு இசைவாகச் செயற்பட்ட இந்திய அரசு, தமிழர்களைக் காக்க¢, தமிழகத்தின் கோரிக்கைக்கு,இசைய மறுப்பது ஏன்? இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தின் பாத்திரம் என்ன? அதன் பெறுமதி என்ன? ஆறரைக்கோடி தமிழர்களின் சனநாயகக் குரலின் வலிமையின் தாக்கம் எவ்வளவு?யுத்தத்தை நிறுத்து! சமாதானம் பேசு! என்ற யாருக்கும் கெடுதல் இல்லாத மனிதநேயம் தோய்ந்தகோரிக்கைக்கு ஏன் இந்த அவமானம்? அலட்சியம்? சிங்களம் ஏவும் ஒவ்வொரு¢ம் குண்டும், தமிழர்களை நாளும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், விமானப் பேரிரைச்சலுடன், பீரங்கிவெடிப்புச் சத்தத்துடன், தமிழர்களின் மரண ஓலங்களும் கலந்தே வன்னியில் எதிரொலிக்கிறது....
தமிழக முதலமைச்சர் அவர்களே உங்கள் அரசியல் வாழ்வில் பல போராட்டங்கள நடத்தியவர்.போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி, பல வரலாறுகளைப் படைத்தவர் நீங்கள், இன்று நிகழ்கலாம் உங்கள்அழைக்கிறது. உங்கள் இறுதி காலத்தில், உலகத் தமிழினத்தின் மனங்களில் நீங்கா இடம் வீற்றிருக்கச் செய்யும்ஒரு போராட்டக்களம் உங்களின் முன்னால் விரிந்து கிடக்கிறது. போராட்டத்திற்குத் தலைமையேற்று வெற்றிவாகை சூடுங்கள். தமிழினத்தைக் காப்பாற்றுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நா தள தளக்க நீங்கள் கூறிய வார்த்தை.... ஈழத்தமிழனைக் காப்பாற்றமுடியாவிட்டால் இந்த ஆட்சி எதற்கு என்று? பின்பு உங்கள் நிலைப்பாட்டில் இருந்துப்பின் வாங்கி மத்திய அரசின்மீது நம்பிக்கை வைத்தீர்கள். ஆட்சியிலிருந்து உங்கள் கட்சி இல்லாமல் போனால் எந்த நம்பிக்கையும் ஏற்படப்போவதில்லை எனவும் காரணம் தெரிவித்தீர்கள். உங்கள் ஆட்சி தமிழகத்தில் இருக்கின்றபோது உங்கள் ஆதரவுடன்மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கையில் இலங்கை அரசின் இன அழிப்பிற்கு உதவியதோடு அல்லாமல்இன அழிப்பை வேடிக்கை பார்த்த பெரும்பாவமும் அவமானமும் உங்களைச் சூழும். இந்தப் பலம் பொருந்திய ஆட்சியால்என்ன பலம் ஏற்பட்டது என்ற கேள்விக்குமிடம் உண்டல்லவா? ஆட்சியை வைத்து ஏதும் செய்யமுடியாத பட்சத்தில்ஆட்சியைப் பிணைவைத்து ஒரு வரலாற்றைப் படைக்க ஏன் முயலக்கூடாது? ஒரு குடும்பத்தின் நலனுக்கான ஒருவரைஇழக்கலாம். ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டின் நலனுக்கான ஒரு ஊரையே இழக்கலாம்என்பது பொதுக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றபோது தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயகௌரவத்திற்காக இனமானத்திற்காகஒரு ஆட்சியை கேடயமாக ஏன் முன்வைக்கக் கூடாது? இனநலன் கருதி இந்த ஆட்சி வீழ்ந்தால் அடுத்து வரும்தேர்தலில் இனத்தின் தலைவனாய் எழுவீர்கள் உறுதி. உலகத் தமிழினம் நன்றியுடன் உங்களைத் தலைமேல்வைத்துப் போற்றும். உலகத் தமிழரின் உள்ளத்து உணர்வு,
இப்படிக்குபிரான்ஸ் வாழ் தமிழின உறவுகள்