Monday, February 23, 2009

செத்தொழியட்டும் தமிழன்; காமெடி சேனலைப் போடு; கொஞ்சம் சிரிக்கலாம்!


தமிழனத் தலைவரின் தியாகம் வாழ்க....
ஈழத்தில் கொத்துக் குண்டுகள் போட்டு குழந்தைகளையும், பெண்களையும்கொன்று குவித்து வருகிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயகருக்கலைப்பு செய்து அப்பட்டமான, இதுவரை இல்லாத இனஅழிப்பைஅரங்கேற்றி வருகிறது, சிங்களப் பேரினவாதம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மகிழ்ச்சியாகவைத்திருக்க கருணாநிதி அண்ட் குடும்பத்தினர்செய்து வரும் தியாகத்தை நினைத்தாலே மனசு பூரிக்கிறது.
போர் நிறுத்தம் கோரி, மத்திய அரசிற்கு சட்டமன்றத் தீர்மானங்களைஅனுப்பிவிட்டு போர் முடிவுக்கு வரவில்லையென்றால் ஈழத்துக்குப்ப போய்சாகவும் தயார் என்று கலங்கியவர், கருணாநிதி. ஈழத்தமிழர்கள் சாவதைஇன்டர்நெட் படங்களில் பார்த்துவிட்டு தாங்க முடியாத துயரம்கொண்டதாக மாங்ககொல்லை மீட்டிங்கில் கண்களை குளமாக்கிக் கொண்டார், கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்துஇலங்கைத் தமிழர் நலப் பேரவை மூலம் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து வருகிறார்கள்.அதே கருணாநிதியின் வாரிசுகள் அண்மையில் ஆதித்யா என்கிறசிரிப்புச் சேனலைத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குப் போட்டியாகதமிழனை சிரிக்க வைக்க சிரிப்பொலி என்கிற மற்றொரு சிரிப்புச் சேனலை கருணாநிதியே தொடங்கி வைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். கருணாநிதி தான் உண்மையிலேயே தமிழனத் தலைவன்.மாவீரன் முத்துக்குமார் சவஊர்வலத்தில் உன் மகனுக்கு பிறந்தநாள் விழாக் கொண்டாடியவர் ஆயிற்றே. மாவீரன் முத்துக்குமாருக்குதீவிரவாதி முத்திரை குத்தியவர், அவரது மகன் ஸ்டாலின்.(அவர்கள் கட்சியிலேயே ஒருவர் இதே காரணத்துக்காகதிமுக மனித சங்கிலியில் தீக்குளித்து இறந்தவரை தீவிரவாதி என்று சொல்ல தைரியம் உண்டா ஸ்டாலினுக்கு?).கனிமொழி, எத்தனை கூட்டங்களில் ஈழத்தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர்வடித்திருப்பாய்... இப்போது தமிழன் செத்துக்கொண்டிருக்கும் போதுஅவர் மகன் ஆதித்யா பெயரில் காமெடி சேனல்.இந்திய டூடேவில் விருந்தினர் பக்கத்தில் எத்தனை முறை நியாயம் பேசியிருப்பார்,கனிமொழி (அதில் சிலதை படித்துவிட்டு உங்களை புதுமைப்பெண் என்று நண்பர்களிடம் சொன்ன என் புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும்) இன்றைக்கு போரை நிறுத்தச் சொல்லாத யாரையும் எதிர்க்கும்திராணி கனிமொழிக்கில்லை.. ஒரே ஒரு எம்.பி., பதவிக்கும், டெல்லியின் கதகதப்பானசீதோஷ்ண நிலைக்கும் உங்களை அடமானம் வைத்து விட்டீரீங்களே! கனிமொழிக்கும் பார்ப்பன பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்இருக்கிறது. போர் நடந்தால் தமிழன் சாவான் என்று வியாக்கானம் பேசுகிறார், ஜெ.,அந்த சாவை வேடிக்கைப் பார்ப்பதோடு காமெடிச் சேனல் தொடங்கிய கனமொழிகைகொட்டி சிரிக்கிறார்.... இனியும் கருணாநிதியை யாராவது தமிழினத்தலைவன் என்றால் செருப்பு பிய்ந்து போகும்... ஜெயலலிதா என்கிற நாய்...சந்தடி சாக்கில் காங்கிரஸை துணைக்குக் கூப்பிடுகிறாள்... தமிழனுக்குச்சேவை செய்யும் காங்கிரஸ் எங்கே தன் கையை விட்டுப் போய்விடுமோஎன்று கருணாநிதி கொய்யோ முய்யோ என்று கத்துகிறார்....தமிழனைக் கொல்வதில் காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லோரும்ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள் ...
இவர்களுக்கும் நம் தமிழன் வரும் தேர்தலில் தோரணம்கட்டுவான்; கோஷம் போடுவான்; ஓட்டும் போடுவான்; உண்மையில்இதுபோன்ற ஒரு காமெடி உலக தொலைக்காட்சிவரலாற்றில் வரவே வராது!

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தமிழனைக் கொல்வதில் காங்கிரஸ், திமுக, அதிமுக எல்லோரும்ஒரே அணியில் இணைந்திருக்கிறார்கள் ...
இவர்களுக்கும் நம் தமிழன் வரும் தேர்தலில் தோரணம்கட்டுவான்; கோஷம் போடுவான்; ஓட்டும் போடுவான்; உண்மையில்இதுபோன்ற ஒரு காமெடி உலக தொலைக்காட்சிவரலாற்றில் வரவே வராது! //

உண்மையை இப்படி போட்டு உடைக்கிறீர்களே!!

Post a Comment