
இந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!




தாமரை














தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், அதற்குக் காரணமான சிங்கள இனவெறி அரசிற்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ”தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” நேற்று(25-02-09) தொடங்கியது.
தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், திரை இயக்குநர் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ”இளந்தமிழர் இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் ஈழத்தமிழருக்காக தீக்குளித்து உயர்நீத்த மாவீரன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியை பற்றியும் விளக்க இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி பேசினார். ”இனத் துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று 1 இலட்சம் பேரிடம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்தியக்கம் குறித்தும் காங்கிரசின் இனத் துரோக நடவடிக்கைகள் குறித்தும் இளந்தமிழ இயக்கத்தின் பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் பேசினார்.
மேலும், தோ்தல் அரசியல் சாராத மாணவர்கள் இளைஞர்களை தமிழ் உணர்வை மட்டும் கொண்டு ஒன்றிணைக்கும் இவ்வியக்கத்தை மாணவர்களிடமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து மாற்று அரசியலுக்கான பாதையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். பின்னர் வழக்கறிஞர் நல்லதுலை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மணிவண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் என பரப்புரைப் பயணக்குழுவினர் இரண்டு அணிகளாக பிரிந்து தஞ்சையிலிருந்து கிளம்பி சென்றனர். வழிநெடுகில் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் தமிழீழ மக்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர். ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கப் படிவத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு வருகின்றனர். வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இப்பயணக்குழுவினர் வருகிற மார்ச் 6 ஆம் திகதி சேலத்தில் நடக்கும் ”இன எழுச்சி மாநாட்டில்” .சந்திக்கின்றனர்
அந்தப் படத்தொகுப்பு ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்தேன்.இளவயது அவருக்கு.. சில நாட்களுக்கு முன்பே அதே இடத்தில்சந்தித்திருந்தாலும், இப்போது தான் பேச வாய்ப்புக் கிடைத்தது.
அவரது பேச்சில் அவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதுஎனக்குத் தெரிந்துவிட்டது. உரிமையுடன் தேனீர் அருந்தலாமா?என்று கேட்டு, அவருடன் தேனீர் கடைக்குச் சென்றபோது ஈழத்தில் நடந்து வரும் போர்ச் சூழல் பற்றி பேசினேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கொழும்புவில் தங்கியிருந்த அவர்,பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் பணியாற்றியிருப்பதாக தெரிந்தது.
இலங்கையில் உண்மையில் என்னதான் நடக்கிறது? என்பதை அவர்அனுபவத்தில் கேட்க விரும்பினேன். என் மீது அவருக்கு நம்பிக்கைஏற்பட்டிருக்க வேண்டும். மனதிறந்து சில விடயங்களை என்னுடன்பகிர்ந்து கொண்டார்.
கே: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் இடையே பாகுபாடு உள்ளதாக, இங்குள்ளவர்கள் சொல்வது எந்தளவுக்கு உண்மை? என்றேன்.
''இங்குள்ளதைப் போல் கல்வி முறை அங்கில்லை. பல்கலைக் கழகங்களில்சேர அதற்கு முந்தைய நிலையில் குறைந்தது 280 புள்ளிகள் யாழ்ப்பாணத்தில்உள்ளவர்கள் அதாவது தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். இதே கொழும்பில் உள்ளவர்கள்,வெறும் 190 புள்ளிகள் பெற்றிருந்தால் போதும். (இந்த இறையாண்மையை பாதுகாக்கத்தான் இலங்கைக்கு ராணுவஉதவி செய்வதாக, மன்மோகன் சிங் நியாயம் கற்பிக்கிறார்.)அதில் கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் படிக்கவோ,விரும்பிய இடத்தில் கல்வி கற்கவோ முடியாத நிலை உள்ளது''. கே: கொழும்பு உள்ளிட்ட சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், வன்னிப் பகுதியிலும் வாழும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்?
''சிங்களவர்களுடன் வாழும் தமிழர்கள் எந்நேரமும் அச்சத்துடன் தான் காலம் தள்ள வேண்டும்.நள்ளிரவில் ராணுவத்தினர் கதவைத் தட்டுவார்கள். திடீரென தமிழர்கள் காணாமல்போவார்கள். யார் மீதாவது சந்தேகம் வந்துவிட்டால் அது உண்மையா? என்றுவிசாரித்து நேரம் செலவளிக்க ராணுவத்தினர் தயாரில்லை. எனவே அடுத்தவிநாடியே அந்த சந்தேகத்துக்கு இடமான நபர் கடத்தப்படுவார்.அதன்பின்பு எப்போதும் அவரைப் பார்க்கவே முடியாது.
வன்னியில் எப்போது குண்டு விழுமோ? என்ற உயிர் அச்சத்தில் வாழ்வதைவிடஇதுமேல் என்று நினைத்துக் கொண்டு, பலரும் தினம் தினம் செத்துக் கொண்டுகொழும்பிலும் பிற சிங்கள ஆதிக்கப் பகுதிகளில் வசித்துவருகிறார்கள்''
கே: தமிழர்களை எல்லாம் அழித்துவிட்ட பிறகு, வெறும் சிங்களவர்கள் மட்டும் வாழும் இலங்கையால் இந்தியாவுக்கு நன்மையா?
சிரித்தார். ''இங்கு வருவதற்கு முன் ஒரு சாப்டவேர் நிறுவனத்தில்இருந்தேன். சமீபத்திய மும்பை தாக்குதல் நடந்தன்று Bar - ல் அமர்ந்துஎன் மேலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் ஒரு தமிழர். அப்போதுஎங்களுக்கு எதிரே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த எங்களது சக ஊழியர்,'இந்தத் தேவடியா பசங்களுக்கு இதுதேவைதான்' என்று திருவாய் மலர்ந்தார்.அவர் ஒரு சிங்களவர். நாங்கள் இருவரும் தமிழர்கள் என்று ஞாபகம்வந்தவராக அமைதியாகிவிட்டார். சிங்களவர்களைப் பொறுத்தவரையில்தமிழர்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. அதனால் இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. பாகிஸ்தான், சீனா உடனான இந்தியப் போரில் இந்த எண்ணத்தைத்தான்சிங்கள அரசு பிரதிபலித்தது.
பாகிஸ்தான் ஆயுதம் கொடுக்கிறது என்று இந்தியாவும் கொடுக்கிறது. ஆனால் இதனால் இங்குள்ள தமிழர்கள் இந்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாக அறிகிறேன். தமிழர்களையும், எதிர்த்துக் கொண்டு சிங்களவனுக்கு உதவுவது சரியில்லை.ஏனென்றால் எதிர்காலத்தில் இந்தியப் பாதுகாப்புக்கு சிங்களவனால்நிறைய ஆபத்து இருக்கிறது. இதை இங்குள்ளவர்கள் உணர்வார்களா? என்றுதெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் சீனாவில் கைதான பாகிஸ்தான்பயங்கரவாதிகளுடன் ஒரு சிங்களவனும் இருந்தான் '' என்றார் அந்த நண்பர்...
இதுதெல்லாம் பேசிவிட்டு ரொம்ப நேரம் கழித்து எடிட்டிங் அறையில் இருந்துகிளம்பிய அவர் என்னிடம் விடைபெறும் போதுதான் அவரது பெயரை இன்னும்நான் கேட்கவே இல்லை என்று தெரிந்தது... அதன்பின்பு எங்கள் செல் எண்கள்பரிமாறப்பட்டன. என் விசிட்டிங் (சரியான தமிழ் வார்த்தை என்ன?) கார்டை அவருக்குக்கொடுத்தேன். அவர் சென்ற பிறகு இறுதிக்கட்ட படத்தொகுப்பில் இருந்தஎன் ஆவணப் படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்த அவரதுகுரலைச் சேர்த்தோம்...
எனக்கு மனநிறைவாக இருந்தது.....